எஸ்.எம்.எஸ் ஹைக்கூ இதழ் :நாள்தோறும் உங்கள் செல்பேசியில் ஹைக்கூ கவிதைகளை பெற்றிட ஆவலுற்றால் தொடர்புக்கொள்ளவும். (9841236965)

கன்னிக்கோவில் இராஜா எழுதிய இரு நூல்களின் வெளியீட்டு விழா

இடமிருந்து வசீகரன், விஜயன், எஸ்.வி. இராஜசேகர், கார்முகிலோன், சந்திரசேகர், ஆசுரா, கன்னிக்கோவில் இராஜா, மற்றும் சுடர் முருகையா

08.03.09 அன்று கன்னிமாரா நூலக அரங்கில் கன்னிக்கோவில் இராஜா எழுதிய இரு நூல்களின் வெளியீட்டு விழாவை மின்னல் கலைக்கூடம் பதிப்பகம் நடத்தியது.
விழாவில் சுடர் முருகையா தலைமை ஏற்று சிறப்புரை ஆற்றினார். 36 கவிஞர்கள் பங்குபெற்ற 'ராஜாங்கம்' ஹைக்கூ தொகுப்பு நூலை கவிஞர் கார்முகிலோன் வெளியிட மாம்பலம் சந்திரசேகர் பெற்றுக் கொண்டார். 'சொற்களில் சுழலும் கவிதை' நூலை எஸ்.வி இராஜசேகர் வெளியிட கவிஞர் எஸ். விஜயன் பெற்றுக் கொண்டார். 'கன்னிக்கோவில் இராஜாவின் எஸ்.எம்.எஸ். மலரை' முனைவர் ஆசுரா அறிமுகப்படுத்தி சிறப்புரை நிகழ்த்தினார்.
வசீகரன் வரவேற்புரை நிகழ்த்தினார். மயிலாடுதுறை இளையபாரதி தொகுத்து வழங்கினார். கன்னிக்கோவில் இராஜா ஏற்புரையும், இளையகவி சலாமத் அலி நன்றியுரையும் நிகழ்த்தினர்.
விழாவில் புதுவை தமிழ்நெஞ்சன், அமுதபாரதி, சேலம் செல்வராஜா, கொள்ளிடம் காமராஜ், அனலேந்தி மற்றும் கவிஞர்கள் எழுத்தாளர்கள் வாசகர்கள் கலந்த கொண்டு சிறப்பிக்க, விழா இனிதே நிறைவேறியது.


கவிதை




தன் குறிப்பு